ஆன்லைன் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெரும் வழிமுறைகள்!!
நாடு முழுவதும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினால் ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலகங்களில் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம்:
நாளுக்கு நாள் பைக், கார் விற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு வீட்டில் ஒரு வாகனம் இருந்த நிலைமை மாறி, ஒரு வீட்டில் பைக், கார், ஸ்கூட்டி என வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரும் வாகனம் ஓட்ட உரிமம் பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அதிகமாக குவிந்த வண்ணம் உள்ளன.
கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுப்பு – அமெரிக்க அரசு அறிவிப்பு!
ஒருவரது ஓட்டுநர் உரிமத்தை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதாக புகார்கள் அதிகமாக வருகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை துணை கமிஷனர் ஓட்டுநர் உரிமம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுளார்.
TN Job “FB Group” Join Now
அதில் ஓட்டுநர் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் இனி ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுனர் பயிற்சி உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும். பொதுமக்களின் பணமும், நேரமும் மிச்சமாகும். மேலும் அலுவலக ஊழியர்களுக்கும் வேலைப்பளு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு ஒரு ஆண்டில் சுமார் 20 லட்சம் ஓட்டுனர் பயிற்சி உரிமங்களை வழங்கி வருகிறது.