தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு – வெளியான வயது வாரியான விவரம்!
தமிழகத்தில் உள்ள மாணவர்களும், கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி 67 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அரசு வேலை வேண்டும் என்ற கனவுடன் பலர் இருக்கின்றனர். ஒரு சிலர் அரசு வேலைகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று அரசு வேலை வாங்குகின்றனர். ஆனால் பலர் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டும், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டும், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18,48,279 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 28,09,415 பேரும், 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் எண்ணிக்கை 18,30,076 பேரும், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2,30,310 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,602 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 73,366 பேரும், பெண்கள் 38,029 உள்பட 1,11,395 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ,100 பேரும், பெண்கள் 5,484 பேர் உள்பட 17,584 பேரும், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9, 483 பேர், பெண்கள் 4,505 பேர் உள்பட 13,988 பேர் பதிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் 3,41,615 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2, 55,496 நபர்கள் என மொத்தம் 67,23,682 நபர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.