கோபி உடன் செல்ல முடிவு செய்த இனியா.. அதிர்ச்சியில் பாக்கியா குடும்பம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா இனியாவை கண்டிக்க அவள் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். உடனே கோபி இனியாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து நியாயம் கேட்கிறார். பின் இனியா கோபி உடன் போக முடிவு செய்ய அதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா வீட்டை விட்டு வெளியே போகிறேன் என சொல்ல, அப்போது கோபி வெளியே வருகிறார். கோபியிடம் இனியா எல்லாரும் என்னை அடிப்பதாக சொல்ல, உடனே கோபி நான் கேட்கிறேன் வா என சொல்லி, உள்ளே அழைத்து செல்கிறார். அப்போது எல்லாரும் அதிர்ச்சி அடைய, கோபி எதற்காக குழந்தையை திட்டுனீங்க என கேட்கிறார். ராமமூர்த்தி எல்லாத்துக்கும் நீ தான காரணம் என சொல்ல, ஈஸ்வரி தப்பு செய்தால் தண்டிக்க தான் செய்வாங்க என சொல்கிறார். எப்படி பயந்து ஓடும் அளவிற்கா என கோபி கேட்க, டாடி எல்லாரும் என்னை திட்டினார்கள் அடித்தார்கள் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
உடனே பாக்கியா இனியாவை முறைக்க, எதற்கு முறைக்கிறாய் என் பொண்ணுக்கு கஷ்டம் என்றால் நான் வருவேன் என கோபி சொல்கிறார். உடனே பாக்கியா அப்பா என்றால் நல்லது சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என சொல்கிறார். எழில் நீங்க எதற்கு பேசுறீங்க வெளியே போங்க என சொல்ல, கோபி நீ வாய்யை மூடு என சொல்கிறார். பின் ஈஸ்வரி நீ தான் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாய் என சொல்ல, அது இவள் வேண்டாம் என சொன்னேன் என் குழந்தைகள் வேண்டாம் என நான் சொல்லவில்லை என கோபி சொல்கிறார். உடனே எழில் நாங்க அப்பா வேண்டும் என சொல்லவில்லையே என சொல்ல, கோபி உங்க இருவரையும் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இனியா இன்னும் குழந்தை என சொல்கிறார்.
வயசுக்கு வந்த பெண்ணை வைத்து கொண்டு இன்னொரு கல்யாணம் செய்து கொண்ட நீ எல்லாம் பேசாதே என ராமமூர்த்தி சொல்ல, அது என் இஷ்டம் என கோபி சொல்கிறார்.இப்படியே மாறி மாறி எல்லாரும் பேச, பாக்கியா இப்போ எதற்கு நாடகம் போடுறீங்க என கேட்கிறார். பின் ஈஸ்வரி இனியாவை வர சொல்ல, ஆனால் கோபி இனியா என்னுடன் வர தயாராக இருந்தால் நான் அவளை கூட்டிக் கொண்டு போவேன் என கோபி சொல்கிறார். உடனே கோபி இனியாவிடம் நீ என்னுடன் வரியா என கேட்க, இனியா நடந்ததை எல்லாம் யோசிக்கிறாள் பின் கோபி உடன் செல்ல முடிவு செய்ய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அரசியல் அமைப்பு எந்த பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமை சட்டம் பற்றி குறிப்பிடுகின்றது ?
எல்லாரும் சொல்ல கேட்காமல் இனியா கோபி உடன் கிளம்புகிறார். பின் குடும்பத்துடன் ரோடு வரை வர ஆனால் இனியா சொல்லாமல் கிளம்புகிறார். பின் ராதிகா வீட்டிற்கு இனியா உடன் கோபி செல்ல அப்போது ராதிகாவும் மயூராவும் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். கோபி இனியாவை டார்ச்சர் செய்வதாக சொல்ல, என் மீது உள்ள கோவத்தை என் மகள் மீது காட்டுவதாக சொல்கிறார். இனிமேல் இனியா இங்கே தான் இருக்க போவதாக சொல்ல ராதிகா சரி என சொல்கிறார். பின் ராதிகா இனியா மீது கை வைக்க ஆனால் இனியாவிற்கு அது பிடிக்கவில்லை. கோபி ராதிகாவை இனியாவிற்கு சாப்பிட எதாவது கொண்டு வர சொல்கிறார். பின் இனியாவையும் மயூராவையும் அருகே வைத்து கொண்டு கோபி சந்தோசமாக இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.