அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு – அறிவிப்பு!
காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு செய்யப்படுவதாக மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தது. இறுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மாநில அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக நீட்டிப்பு – பட்ஜெட் தாக்கல்!
இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கி வரும் நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பு சேருவதற்கான 2ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. ஏற்கனவே 11ம் வகுப்புக்கு விண்ணப்பித்தும் சில மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து புதிதாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 11ம் வகுப்புக்கு விணைப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.