தமிழகத்தில் முதுகலை & PHD படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் பி.எச்டி. பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் முதுகலை படிப்பிற்காக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனையடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 22ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் ஜூலை 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக கல்லூரி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் தற்போது தொடங்கியது.
Exams Daily Mobile App Download
இதனால் மாணவர்கள் ஜூலை 19ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலை மற்றும் பி.எச்டி. பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. முதுகலையில் 400 இடங்கள், பி.எச்டி., படிப்பில் 200 இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகளில் மாணவர்கள் https://admissionsatpgschool.
NABARD வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!
மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர்கள் இளங்கலை, முதுகலை முடித்த மாணவர்கள், தற்காலிக சான்றிதழ்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு ஆகஸ்ட் 26ம் தேதி மாதிரி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் செப்டம்பர் இரண்டாவது வாரம் மாணவர் சேர்க்கை முடிவுறும் என்றும் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.