NABARD வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!
நடப்பு வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து, அனைத்து துறைகளில் இருந்தும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தேசிய விவசாய, கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 21 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு அடிப்படையில் சாப்ட்வேர் இன்ஜினியர் 4, பிசினஸ் அனாலிட்டிஸ் 2, அப்ளிகேசன் அனாலிட்டிஸ் 2, பவர் டெவலெப்பர்ஸ் 2, இ.டி.எல்., டெவலப்பர்ஸ் 2, தொழில்நுட்ப அதிகாரி 1, டேட்டாபேஸ் அனாலிஸ்ட் 1 உட்பட மொத்தம் 21 காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனியாக தகுதிகள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் புதிய ஓய்வூதியத்தில் மாற்றங்கள் – ரூ.2 லட்சம் வரைக்கும் பென்சன்!
மேலும் பொறியியல் துறையில் ஐடி, கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர், எம்சிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து பணிகளுக்கும் தொடர்புடைய பிரிவில் விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே விண்ணப்பதாரர்கள் நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ரூ.800 ஆகும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ. 50 செலுத்த வேண்டும். இதையடுத்து இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் 30.6.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1306224740advertisement.pdf என்ற தளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.