தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022 – 2023 ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல அதாவது கொரோனா கால கட்டத்திற்கு முன்பு இருந்தது போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசு பள்ளிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் தனியார் பள்ளிகளில் பயில கூடிய தங்களது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பெற்றோர்கள் இருந்தனர்.
இந்த நேரத்தில் மக்களின் கவனம் அரசு பள்ளிகளை நோக்கி சென்றது. அப்போது தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2022 – 2022 ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்க விலை அதிரடியாக குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Exams Daily Mobile App Download
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் அதாவது காலாண்டு தேர்வு துவங்குவதற்கு முன்பு வரை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.