தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அந்த கல்லூரிகளில் கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து முதற்கட்ட கலந்தாய்வு செப் 10 ஆம் தேதி தொடங்கப்பட்டு 15 ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. அதில் சுமார் 10,351 மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்பட்டது.
அதன் பின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 23,458 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து பி.ஆர்க். படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. மேலும் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகிற அக். 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மாணவர்கள் பலர் பொறியியல் படிப்புகளில் கணினி அறிவியல், ஐ.டி., எலக்ட்ரானிக் போன்ற துறைகளை அதிகம் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர்.
என்னது.. இன்னும் நீங்க 5G-க்கு மாறலயா – அப்போ உங்க மொபைலில் இந்த செட்டிங்கை உடனே மாத்துங்க!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பொறியியல் படிப்பில் இன்னும் 1.10 லட்சம் பேருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது என தெரிவித்த அவர், இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்