தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு விவகாரம் – அதிகரிக்கும் புகார்கள்!
தமிழகத்தில் அரசுப்பணிகளில் பெண்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு அதிகரிக்கும் நிலையில், ஆண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக புகார்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அரசின் அறிவிப்பு:
தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும். இதற்காக ஒவ்வொரு குறிப்பிட்ட துறையின் கீழ் உள்ள பணியிடங்கள் மற்றும் காலியிடங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றது. தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், அரசு பல பிரிவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடும் வழங்கியுள்ளது.
நடிகர் அஜித் ‘வலிமை’ பட அப்டேட் – டீஸர், பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு தனது சமீபத்திய அறிக்கையில், அரசு பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசின் போட்டித் தேர்வர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் புகார்களை எழுப்பி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் அரசு பணிகளுக்கான ஒவ்வொரு பணி அறிவிப்பிலும் பணிகளுக்கான எண்ணிக்கையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, அதேபோல பெண்களுக்கான சிறப்பு தனி இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும், அதேபோல பொதுப் பிரிவிலும் பெண்களுக்கு முன்னூரிமை அளிக்கப்படுகிறது. இதனால் அரசு பணிகளில் 70% பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசின் தற்போதைய அறிவிப்பினால் பெண்கள் மட்டும் 80% அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் நிலை வந்துவிடும். இதனால் ஆண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. எனவே, பொதுப்பிரிவில் பெண்களுக்கு பாலின ரீதியிலான முன்னுரிமை அளிப்பதை நிறுத்தி மதிப்பெண் அடிப்படையிலேயே ஆண் பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்பட வேண்டும் என்கின்றனர் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் புதிய அறிவிப்பிற்கு எதிராக நேற்று #justice for men in tnpsc என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.