கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை – வருத்தத்தில் ரசிகர்கள்!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா ஆனந்த் ஒட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த யாஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
நடிகை யாஷிகா:
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். அந்த நிகழ்ச்சியில் அவர் அனைத்து டாஸ்க்குகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்தார். அதன் மூலமாக சிறு வயதிலேயே அவர் அதிகம் ரசிகர்களை சம்பாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 18 வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே காரில் அதிவேகமாக ஜூலை 25 ஆம் தேதி அன்று சென்று கொண்டிருக்கும் போது, கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றில் மோதி உருண்டது. அதில் யாஷிகா உடன் வந்த அவர் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடுப்பிற்கு கீழே பெரிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் இந்த சாதியை சேர்ந்தவரா? பகீர் கிளப்பும் வீடியோ!
அதனால் தற்போது வரை நடக்க முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தோழி இறப்பு காரணமாக யாஷிகாவை பலர் திட்டி கமெண்ட் செய்தனர். தற்போது அவர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவரின் அந்த நிலையை பார்த்து வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். எப்படி இருந்த பெண் இந்த நிலைமையில் இருப்பதை பார்த்தால் கல் மனதும் கரைய தான் செய்கிறது.