சத்தமில்லாமல் நடந்த நடிகை வித்யூலேகாவின் திருமணம் – வாழ்த்தும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் வித்யூலேகாவுக்கு தற்போது திருமணம் நிகழ்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை திருமணம்
பொதுவாக சினிமாக்களில் பெண் நகைச்சுவையாளர்கள் அதிகம் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் சினிமாவில் நெடு நாட்களாக நீடித்திருப்பது அதிசயம் தான். ஆனால் சினிமா, ஒரு சிலருக்கு வாய்ப்புகளை அளித்தருவது உண்டு. அந்த வகையில் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. முதல் திரைப்படத்திலேயே தமிழ் மக்கள் மனதில் கிளிக் ஆன இவர் இப்படத்தில், நடிகை சமந்தாவுக்கு தோழியாக நடித்திருந்தார்.
செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் – வெளியான ப்ரோமோ!
இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, வீரம், ஜில்லா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும், சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார். சற்று குண்டான தோற்றம் கொண்ட இவர் சமீபத்தில் உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இப்படி இருக்க கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று நடிகை வித்யூலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை – அவரது கணவர் வெளியிட்ட பதிவு!
இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 11) நடிகை வித்யூலேகாவுக்கு திருமணம் நிகழ்ந்துள்ளது. எவ்வித பரபரப்பில்லாமல் உறவினர்கள் முன்னிலையில் அமைதியாக நடந்து முடிந்துள்ள இவரது திருமண புகைப்படங்களை அவரது உறவினரான கீதாஞ்சலி செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவ, வித்யூலேகா- சஞ்சய் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.