நெருங்கிய தோழி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்துவை நினைவு கூர்ந்த சரண்யா – ரசிகர்கள் உருக்கம்!
தன் நெருங்கிய தோழி விஜே சித்ரா போன வருடம் கடைசியாக சீரியலில் வந்த நாளை நினைத்து அவரை நினைவு கூர்ந்து நடிகை சரண்யா தனது ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் பேசியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லைவ் வீடியோ:
நடிகை விஜே சித்ரா சின்னத்திரையில் கடந்த 10 வருடங்களாக கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி அதன் மூலம் பெரும் புகழை அடைந்தவர். இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டது. முதலில் டிவி நிகழ்ச்சிகளை பார்வையாளராக காண வந்த சித்ரா அதே நிகழ்ச்சியில் மிகப்பெரிய பிரபலமாக மாறி இருப்பது தான் அவர் அடைந்த வெற்றி. சித்ரா சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளுயன்சராகவும் இருந்துள்ளார். இறுதியாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பிரசவத்திற்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!
முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார் என்பதை விட அவர் வாழ்ந்து வந்தார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை சரண்யா நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு லைவ் வீடியோ வந்துள்ளார். அதில் நேற்று காலை முதல் சித்ராவை நினைவு கூர்ந்து பலரது செய்திகளும் தனக்கு வந்து கொண்டிருப்பதாகவும், கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி தான் இறுதியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவின் இறுதி காட்சிகள் ஒளிபரப்பாகியதாகவும் அதே நாளில் தான் தனது புது சீரியலான வைதேகி காத்திருந்தாள் சீரியலில் தனது முதல் எபிசோட் வந்துள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா & வருண் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இது தனக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், சித்ராவின் ஆசீர்வாதமாக இதை தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் சீரியலில் தோன்றுவதாகவும் அது இந்த குறிப்பிட்ட நாளில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடிகர் பிரஜனின் ஜோடியாக நடிப்பது என்பதை ரொம்ப நாள் காத்திருந்த விஷயம் நடந்துள்ளது என்றும், தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறியுள்ளார். இந்த சீரியலில் இதுவரை இல்லாத மாதிரி பொய் சாட்சி கூறும் கதாபாத்திரத்தில் நடிப்பது புது அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். தனது தோழியை இந்த சமயத்தில் சரண்யா நினைவு கூர்ந்து பேசி இருப்பது குறித்து ரசிகர்கள் மிகவும் உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.