விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா & வருண் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் மூன்று வாரங்களில் இறுதி சுற்று வர இருக்கும் நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் எலிமினேஷன்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை நெருங்கி உள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் இறுதி சுற்று நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும். இன்னும் பல முக்கிய டாஸ்குகள் வருகிற வாரங்களில் வர இருக்கிறது. டிக்கெட் டூ பைனல் யாரு பெறுவார் என கடுமையான போட்டிகள் நடத்தப்படும். இந்த சீசனில் ஆண் பெண் என அனைவரும் கடுமையான டாஸ்குககளை கூட சுலபமாக செய்கின்றனர். அதுவே இந்த சீசனின் வெற்றியாக இருக்கிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நடிகர் சஞ்சீவின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம்!
இந்த வாரம் தலைவராக தாமரை இருக்கிறார். மேலும் வருண், அக்ஷரா, பாவ்னி, நிரூப், பிரியங்கா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்த வாரம் யாரு வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகின்றனர். போட்டியாளர்கள் குடும்பத்தை பார்த்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் சொன்ன அறிவுரைகளை கேட்டு போட்டியாளர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் பிரசாத் யார் தெரியுமா? சினிமா டூ சின்னத்திரை பயணம்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் வருண் மற்றும் அக்ஷரா குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடங்களில் இருக்கின்றனர். ஆகையால் அவர்களில் ஒருவர் தான் வெளியேற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அக்ஷரா நல்ல கடுமையான போட்டியாளர் அவர் வெளியேறும் தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.