‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியது இதற்காக தான் – மனம் திறந்த நடிகை ரோஷினி!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் கண்ணம்மாவாக அறிமுகமான நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இந்த சீரியலை விட்டு விலகிய பின்னர் சீரியல் நடிகர், நடிகைகள் குறித்தும் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்தும் ஒரு ரீசன்ட் பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
நடிகை ரோஷினி
தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்று கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி தற்போது சீரியலை விலகி இருக்கிறார். அதாவது நடிகை ரோஷினி திரைப்பட வாய்ப்புக்காக தான் இந்த சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி இருக்க சமீபத்தில் நடிகை ரோஷினி கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரவேசம், நடிகர், நடிகைகள் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ஜெனிபரின் கர்ப்பகால போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!
இது குறித்து நடிகை ரோஷினி பேசுகையில், கண்ணம்மா கதாப்பாத்திரம் என்பது குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும், கண்ணம்மா போல் தவறு செய்யாத சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது தான் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். இந்த சீரியலில் அத்தையாக வரும் சௌந்தர்யா, பாரதிக்கு படித்த நிறமுள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். அதனால் கதையின் ஆரம்பத்தில் கண்ணம்மாவை அவர்களுக்கு பிடிக்காது.
பிறகு ஒரு கட்டத்தில் கண்ணம்மா மீது பாரதி சந்தேகப்பட சௌந்தர்யா மொத்தமாக கண்ணம்மாவுக்கு ஆதரவாக இருப்பார். பொதுவாக சீரியலில் பார்ப்பதை விட நாங்கள் எல்லாரும் நிஜத்தில் ஜாலியாக இருப்போம். நான் சீரியலுக்கு வருவதற்கு முன்னதாக இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்கில் வேலை பார்த்தேன். அந்த வேலை பிடிக்கவில்லை என விட்டு வந்த பிறகு பிசினஸ் செய்தேன். எனக்கு போட்டோஷூட் செய்வது பிடிக்கும். அதனால் நிறைய போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம்.
இதை பார்த்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இயக்குனர் பிரவீன் போன் செய்து இந்த ரோல் பற்றி பேசினார். அதற்கு பின்பு என்னுடைய வாழ்க்கையே மாறிப் போனது. பொதுவாக சீரியல் நடிகைகள் எல்லாரும் அதிகமாக மேக்அப் போட்டு இருப்பார்கள். ஆனால் என்னோட கண்ணம்மா கதாப்பாத்திரம் சிம்பிளாக இருப்பதால் ஒருவரும் என்னை ஹீரோயினாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் நடிப்பு என்பது என்னவென்று தெரியாத போது நிறைய பேர் இவரெல்லாம் ஒரு நடிகையாக என கேலி செய்தார்கள்.
ஜீ தமிழ் நடிகை ரேஷ்மா, மதன் திருமணம் – சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்ட கோலாகல கொண்டாட்டம்!
நிறைய கஷ்டப்பட்டேன். ஆனால் கண்ணம்மா கதாப்பாத்திரம் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு பின்பாக சினிமாவில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கதாப்பாத்திரமாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் போல வில்லியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணம்மா என்கிற நல்ல வாய்ப்பை விடவா சினிமா உனக்கு கை கொடுக்கப் போகிறது. இதில் பாதியில் விட்டுச் செல்வது மிகவும் தவறான முடிவு.