ஜீ தமிழ் நடிகை ரேஷ்மா, மதன் திருமணம் – சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்ட கோலாகல கொண்டாட்டம்!
சின்னத்திரை நடிகை ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரின் திருமணம் இன்று நடக்க இருக்கும் நிலையில், நேற்று மாலை அவர்களுக்கு நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
காதல் திருமணம்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சாதாரண பெண்ணாக, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அறிமுகம் ஆனவர் ரேஷ்மா முரளிதரன். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர். நிகழ்ச்சியில் ஒரு பிரபலமும், ஒரு சாதாரண அறிமுக கலைஞரும் ஜோடியாக சேர்ந்து நடனமாட வேண்டும். அந்த நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா நன்கு அறியப்பட்டார். இதனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பூவே பூச்சூடவா என்ற சீரியலில் கதையின் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு கிளம்பும் பாரதி, சோகத்தில் குடும்பம் – இன்றைய எபிசோடு!
இந்த தொடர் பல வருடங்களாக வெற்றிகரமாக சென்றது. இந்த சீரியலில் மதன் பாண்டியன் (சின்னத்திரை தொகுப்பாளர்) ஒரு வேடத்தில் நடித்து வந்தார். இவர் ஜீ தமிழில் அஞ்சறை பெட்டி ஷோ மூலமாக பிரபலமானவர். இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய சில காலம் கழித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இந்நிலையில், பூவே பூச்சூடவா சீரியல் முடிந்த பிறகு தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டெய்லர் என்ற சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் நவம்பர் 15ம் தேதியான இன்று திருமணம் நடக்க இருக்கிறது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற மெஹந்தி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரின் நிச்சயதார்த்த விழா சென்னையில் நடந்துள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் தீயாக பரவி வருகிறது.