ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் அம்மனாக களமிறங்கிய நடிகை ரட்சிதா – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து பின் விலகிய ரட்சிதா தற்போது ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் அம்மன் கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
நடிகை ரட்சிதா:
விஜய் டிவி “சரவணன் மீனாட்சி” தொடர் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலக்ஷ்மி. அவர் ஒரு காலத்தில் சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். சமீபத்தில் மிர்ச்சி செந்திலுடன் ஜோடி சேர்ந்து விஜய் டிவியில் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மஹா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை நீலிமா ராணி வளைகாப்பு நிகழ்ச்சி – பிரபலங்கள் பங்கேற்பு!
சீரியல் குழு வேண்டும் என்றே தனக்கு சீன் கொடுக்காமல் சீரியலில் இருந்து விலக வைத்ததாக அவர் தரப்பில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ரட்சிதா கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகர் ஒருவருடன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிய ரட்சிதா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
‘ராஜா ராணி’ சித்து தனது மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த காஸ்ட்லி பரிசு – ரசிகர்கள் வாழ்த்து!
அதில் அம்மன் வேடத்தில் நடிக்க இருக்கிறேன் என்ன சீரியல் என யூகித்து சொல்லுங்கள் என பதிவிட்டிருந்தார். தற்போது அவர் செம்பருத்தி சீரியலில் நவகிரக தோஷத்தில் கடைசி அம்மனாக களமிறங்கி இருக்கிறார். அவர் அம்மன் டாக்டர் வேடத்தில் வந்து பார்வதியை காப்பாற்றுவது போல கதை கொண்டு செல்லப்படுகிறது. ரட்சிதா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.