கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை நீலிமா ராணி வளைகாப்பு நிகழ்ச்சி – பிரபலங்கள் பங்கேற்பு!
தமிழ் சீரியல் நடிகையான நீலிமா ராணி தனது இரண்டாவது குழந்தையை கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
நீலிமா ராணி:
பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நீலிமா ராணி. அவர் முதன்முதலில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் பல படங்களிலும் சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
‘ராஜா ராணி’ சித்து தனது மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த காஸ்ட்லி பரிசு – ரசிகர்கள் வாழ்த்து!
மெட்டி ஒலி, அத்திப்பூக்கள், வாணி ராணி, தென்றல், அரண்மனை கிளி என பல ஹிட் சீரியல்களில் இவரது பங்களிப்பு இருக்கிறது. இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது. அவர் தற்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். அதனால் சீரியலில் இருந்து விலகி தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என பல வீடியோக்களை அவர் பதிவிடுவார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ஐ அதிகரிக்க மாஸ்டர் பிளான்!
இந்நிலையில் அவர் இரண்டாவது கர்ப்பத்தை கொண்டாடும் வகையில் பல புதுவிதமான போட்டோஷூட் நடத்தினார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது, தற்போது அவருக்கு இரண்டாவது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட், ஸ்ரீதேவி ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.