கண்ணம்மாவாக நடிப்பது கஷ்டம், மனம் திறந்த அஞ்சலி – சுவாரசிய பேட்டி!
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கண்மணி. அவர் பாரதி கண்ணம்மா கதாபாத்திரங்கள் பற்றியும் அதில் நடிப்பவர் பற்றியும் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரமான அஞ்சலியாக நடித்து வருபவர் கண்மணி. அவர் பிரபல யூடுப் சேனல் ஒன்றில் அவரை பற்றியும், பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் சொந்த ஊர் சென்னை எனவும் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் நடித்துள்ளாராம்.
மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் கண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!
மேலும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ரொம்ப நல்ல தோழி எனவும், இவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் எதாவது சந்தேகம் எனில் அதை ரோஷினியிடம் தான் கேட்பேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெண்பாவும் நல்ல தோழி எனவும், அவரை முதன்முதலில் வெண்பாவாக பார்த்து சந்தோசமாக இருந்ததாக சொல்கிறார். மேலும் ஒரு காலேஜ் செல்வது போல தான் படப்பிடிப்பு தளம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். முதலில் எப்படி நடிப்பது என்று தெரியாமல் இருந்தேன் பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் தான் நடிக்க சொல்லி கொடுத்தார் என தெரிவிக்கிறார்.
மன்னிப்பு கேட்கும் சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
திடீரென கண்ணம்மாவாக நீங்க மாறிவிட்டால் என்ன செய்வீங்க என கேட்டதற்கு, அவர் கண்ணம்மாவாக இருப்பது கஷ்டம் என தெரிவிக்கிறார். சிறு வயதில் இருந்தே மாடல் ஆக வேண்டும் என கனவு இருந்ததாகவும், முதலில் சினிமாவிற்கு வந்தது அப்பாவிற்கு பிடிக்கவில்லை எனவும், தற்போது அனைவரும் போட்டோ எடுத்துக் கொள்வது அவருக்கு பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார். நல்ல கதை கிடைத்தால் சினிமாவில் நடிக்க இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.