வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன் பிக்ச்சர்ஸ் வழங்கும் பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு, 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் அளித்த நேர்காணலில், தந்தையுடனான உறவு பற்றியும், அனைத்து மதங்கள் மீதான நம்பிக்கை குறித்தும், தனது மகன் சஞ்சயின் வாழ்க்கை பயணம் என பல முக்கிய அம்சங்களை பகிர்ந்துக்கொண்டார்.
சன் டிவி பீஸ்ட்:
தளபதி விஜய் அவர்கள் நடித்த பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறாத காரணத்தால் 10 வருடங்களுக்கு பிறகு அவர் சன் டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பானது. அதில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுப்பாளராக வந்தார். பல வருடங்களுக்கு பிறகு நேர்காணலுக்கு விஜய் பங்கு கொண்டது தமிழகம் முழுவதும் பேசப்பட்ட ஒன்றாக மாறியது.
வருங்கால மனைவியுடன் ‘குக் வித் கோமாளி புகழ்’ வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
மேலும், இந்நிகழ்ச்சியில் நெல்சன் அவர்கள் விஜயிடம் கேட்ட முதல் கேள்வியாக,ஏன்? பல ஆண்டுகளாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கவில்லை என்பதுதான். அதற்கு விஜய் அவர்கள் 10 வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு நேர்காணலில் எழுதப்பட்ட தகவல்கள் மிகவும் தவறாக தோன்றியது. குடும்ப உறுப்பினர்கள் உட்பட சில நெருக்கமானவர்கள் சொன்னாங்க நேர்காணல் படிக்கும் பொழுது தெனாவட்டா இருந்த மாதிரி இருந்துச்சுனு. நான் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, நான் அப்படிச் சொல்லவில்லை என்பதை விளக்கினேன். ஆனால் என்னால் அதை எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் விளக்கிட முடியாது. அதனால் தான் நேர்காணல்களில் இருந்து விலகியே இருந்தேன் என தெரிவித்தார்.
மேலும், உங்க மகன் சஞ்சய் அவர்களை எப்போது சினிமாவில் பார்க்கலாம்? என்ற கேள்விக்கு விஜய் அவர்கள் தனது மகன் சஞ்சய் திரையில் நடிப்பதை பார்க்க நீங்கள் ஆசைப்படுவது போலவே நானும் ஆசைப்படுவதாக தெரிவித்தார். அதேசமயம், அவருக்கு விருப்பம் இல்லை என்றால், நானும் என் விருப்பத்துக்காக அவரை வற்புறுத்த மாட்டேன் என்று கூறினார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நடந்த நிகழ்வு ஒன்றை ஷேர் செய்தார்.
அதாவது ஒரு முறை பிரேமம் பட இயக்குனர் கதை சொல்ல வரவும், நானும் எனக்கு தான்னு நினைச்சேன் ஆனா உங்க பையன் கிட்ட கதை சொல்லனும் சொன்னாரு, கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது. சஞ்சய் ஒத்துக்கனும் அத பண்ணனும்னு நெனச்சேன். ஆனா அவன் டைம் கேட்டான். அவன் எது பண்ணாலும் எனக்கு சந்தோஷம் தான். நானும் வற்புறுத்தவில்லை என தெரிவித்தார். இதிலிருந்து ரசிகர்கள் விஜய் மகனான சஞ்சய் அவர்களை வெள்ளித்திரையில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.