விஜய் டிவி சீரியல் பிரஜின் – சாண்ட்ரா ஜோடியின் வாழ்க்கை கதை | ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பிரஜின் அவரது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்தும் வருகின்றனர்.
சின்னத்திரை:
தற்போதைய இளைஞர்கள் மொபைல் போனுக்கு அடிமையாகி வருவது போன்று பெண்கள் பலரும் சீரியலுக்கு அடிமையாகி வருகின்றனர். அவ்வாறு சீரியல் மூலம் பிரபலம் ஆகி பலரும் வெள்ளித்திரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் ஒருவர் தான் நடிகர் பிரஜின். கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது ஆரம்ப கால வாழ்க்கையை சன் மியூசிக் சேனலில் விஜே ஆகா தொடங்கினர். அதன் பின் விஜய் டிவி-யில் இது ஒரு காதல் கதை, சன் டிவி-யில் பெண், அஞ்சலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி கொண்டார்.
‘இந்த சீரியலுக்கு பாவம் சௌந்தர்யானு பேர் வச்சிருக்கலாம்’ – ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
சற்று பிரபலமான நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் வந்த இவர் சா பூ த்ரீ, தீ குளிக்கும் பச்சை மரம், சுற்றுலா, மணல் நகரம் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கால் தடம் பதித்தார். அதன் பின் மீண்டும் விஜய் டிவியில் சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி என்ற சீரியல்கள் மூலம் வலம் வர தொடங்கினார்.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பா ஃபரீனா திருமண நாள் கொண்டாட்டம் – இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
வாழ்க்கையில் தொடர் போராட்டங்களை சந்தித்து வந்த இவர் 2008-ஆம் ஆண்டிலேயே சின்னத்திரை நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த இந்த ஜோடி 10 வருடங்களுக்கு பிறகு ட்வின்ஸ் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ளனர். 2006-ல் காதலர்களாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் தற்போது ட்வின்ஸுடன் எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.