தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு!
தமிழகத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்வது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது.
தமிழக ஆசிரியர்கள்:
தமிழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் அவர்கள் பல தேர்தல் வாக்கு உறுதியையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும்படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் CPS ரத்து, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஊதிய முரண்பாடு சரி செய்தல், ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆகியவற்றைக் கூறி இருந்தனர். மேலும் அரசு ஊழியர்கள் கோரிக்கையை வைத்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சில நாட்களுக்கு முன்னர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. புதிய அறிவிப்பின்படி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க ஆரம்பித்து உள்ளனர்.
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – விண்ணபிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை!
அதனை தொடர்ந்து தற்போது தி மு க அரசை எதிர்த்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அதனால் தமிழக அரசு இதனை கண்டு கொண்டு தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இந்த போராட்டம் தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய நிர்வாகம் சார்பில் நடக்க உள்ளது.