விதிகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – அரசு அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி அரசு சார்பில் இயங்கி வரும் துறைகளில் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பை நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புதுச்சேரி அரசு:
புதுச்சேரியில் 13 முக்கிய துறைகள் இயங்கி வருகின்றன. அதில் பல அரசு ஊழியர்கள் வேலை செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது முடிந்த தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் மத்திய அரசின் ஒப்புதலின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் காரணமாக புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 34 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 38 சதவிகிதமாக DA உயர்த்தி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது வெளியான அறிவிப்பின் படி புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி அரசு ஊழியர்கள் தாமதமாக அலுவலகங்களுக்கு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.