தமிழகத்தில் ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் விற்பனை? – அரசின் முடிவு!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் நிறுவனம், பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் ஆவின் பால், பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்வது குறித்து நீதிபதி ஆலோசனை கூறியுள்ளார்.
ஆவின் பால்:
இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் தெரிவித்தாவது, சென்னையில் கடந்த 20 நாட்களில் 22,930 கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இதில் 8550 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதனால் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்கப்பட்டு வருகிறது. மேலும், அன்றாடம் பயன்படுத்தப்படும் ஆவின் பால், பிளாஸ்டிக் கவர்களில் தான் விற்கப்படுகிறது. இதற்கு மாற்று வழி கண்டறிய வேண்டும்.
தேசிய வீட்டுவசதி வங்கியில் காத்திருக்கும் பணியிடம் – விரைந்து விண்ணப்பியுங்கள்!
Exams Daily Mobile App Download
அதாவது, பிளாஸ்டிக் கவர்களில் ஆவின் பால் விற்கப்படுவதற்கு மாற்றாக ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி இனி வரும் காலங்களில் ஆவின் பால் சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது அமுல், நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் டெட்ரா பேக்குகளில் வழங்குவது போன்று வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.