ஆவின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பால் அட்டையுடன் ரேஷன், ஆதாரை இணைக்க அறிவுறுத்தல்!
ஆவினின் மாதந்திர பால் அட்டை வைத்திருப்பவர்கள் இனி பால் அட்டையுடன் ரேஷன் அல்லது ஆதார் அட்டையினை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கூட்டமைப்பு அறிவித்துள்ளது
பால் அட்டை:
தமிழகத்தில் மொத்தமாக ஆவின், தினசரி 29 லட்சம் லிட்டர் பால்லை விற்பனை செய்கிறது. மேலும், 6 லட்சம் வாடிக்கையாளர்கள் மாதாந்திர பால் அட்டை வைத்துள்ளனர். நவம்பர் 4ம் தேதி முதல் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை 1 லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. ஆனால் பால் அட்டைதாரர்களுக்கு முன்னதாக பெறப்பட்ட விலையிலேயே பால் கிடைக்கிறது. அதன்படி, மாதம் அவர்களுக்கு ரூ.420 குறைகிறது. இதனால் வீட்டு நுகர்வோர்கள் மட்டுமல்லாமல் விற்பனையாளர்களும் மாதாந்திர அட்டை மூலம் பால்லை பெற்று வருகின்றனர்.
திடீரென குறைந்து மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
Exams Daily Mobile App Download
இதனை தவிர்ப்பதற்காக வீட்டு நுகர்வோர்கள் பால் அட்டை புதுப்பிக்கும் போது ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டினை அதனுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கூட்டமைப்பு (TNMPCF) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால், தற்போது நடப்பு மாதத்தில் வழக்கத்தை விட சுமார் 10,000 அட்டைகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவை, வீடு மாறிய நுகர்வோர்களால் கூட இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கூட்டுறவு சங்கங்களில் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15ம் தேதிக்குள் பால் அட்டைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.