ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வீடு தேடி வரும் சேவைகள்! UIDAI அறிவிப்பு!
ஆதார் கார்டில் தங்களுடைய ஆதார் கார்டில் உள்ள மாற்றங்களை வீட்டு வாசலிலேயே மாற்றுவதற்கான வசதியை UIDAI அமைப்பானது அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பதிவில் முழு விவரத்தை தெரிந்து கொள்வோம்.
ஆதார் கார்டு
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனிதனின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அதாவது பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் எல்லா பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் ஆக உள்ளதால் வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமான ஒன்று.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பயோ மெட்ரிக் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முந்தைய காலகட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று மாற்ற வேண்டும். ஆனால் ஆதார் கார்டில் உள்ள மாற்றங்களை அதிகமான மக்கள் மாற்ற முடியாமல் இருந்ததால், மக்களின் நலன் கருதி UIDAI தளம் வீட்டில் இருந்தே மொபைல் மூலம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, தற்போது ஒரு அறிவிப்பை UIDAI அறிவித்திருக்கிறது. ஆதார் சேவைகளை வீட்டு வாசலில் கொண்டு வர UIDAI உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள திருத்தங்களை செய்ய UIDAI அமைப்பானது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணிபுரியும் தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், இந்த சிறப்பு பயிற்சி முடிந்த தபால்காரர்கள் ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய விரும்புவர்கள் வீட்டிற்கே சென்று ஆதார் அப்டேட் சர்விஸ்களை தபால்காரர்கள் செய்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.