உங்கள் ஆதார் எடுத்து 10 வருஷம் ஆகிவிட்டதா? அப்போ கட்டாயம் இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!
ஆதார் அட்டை குறித்த பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வரும் நிலையில், ஆதார் விவரங்களை புதுப்பிப்பது குறித்த உத்தரவினை தற்போது வெளியிட்டுள்ளது.
ஆதார் அப்டேட்:
ஆதார் ஆணையம் தற்போது ஆதார் அட்டையின் முக்கியத்துவம் மற்றும் அதனை பாதுகாப்பது குறித்த அவசியத்தை குறித்து பொதுமக்களுக்கு அதிக அளவிலான விழிப்புணர்வு செய்திகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறது. தற்போது ஆதார் அட்டையில் நாம் பதிவு செய்துள்ள விவரங்கள் திடீரென்று மாறும் நிலை ஏற்படலாம். அதாவது, முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் போன்றவை மாறும் வாய்ப்புகள் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால், நமது ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்து கொள்வதற்கான வசதிகள் அளிக்கப்பட்டது. கடந்த மாதம் இது பற்றி அறிவித்த மத்திய அரசு, தற்போது பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயமாக தங்களது ஆதாரை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் குறித்து கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அடுத்த கட்டத்தை எட்டிய அரசு ஊழியர்களின் போராட்டம்!
Exams Daily Mobile App Download
ஆன்லைன் முறையில் முகவரி அப்டேட் வழிமுறைகள்:
- ஆதார் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
- அதில், self service பகுதிக்கு சென்று, முகவரி மாற்றம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, உங்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் OTP ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
- பிறகு, ‘முகவரியைப் புதுப்பிக்க தொடரவும்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- உங்கள் புதிய முகவரியை பதிவிட்டு, ‘அப்டேட் அட்ரஸ் விஸ் சீக்ரெட் கோட்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- முகவரியின் ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- இனி உங்களது ஆதார் புதுப்பிக்கப்பட்டு விடும்.