தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அடுத்த கட்டத்தை எட்டிய அரசு ஊழியர்களின் போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் நடைபயண போராட்டம் நடத்த உள்ளனர்.
நடைப்பயண போராட்டம்:
இந்தியாவில் 2004ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்த Facebook – CEO அதிரடி அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் அடுத்த கட்ட போராட்டமாக தற்போது CPS ஒழிப்பு இயக்கத்தினர் நடைபயண போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 15ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மாநிலம் தழுவிய நடைபயண போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி கோரி சேலம் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் CPS ஒழிப்பு இயக்கத்தினர் கடிதம் வழங்கியுள்ளனர்.