பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்த Facebook – CEO அதிரடி அறிவிப்பு!
Facebook நிறுவனம் யாரும் எதிர்பாக்காத வகையில் அதிரடியாக தனது 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் ஒரு சில சலுகைகளை குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதிரடி அறிவிப்பு:
தற்போதைய பொருளாதார மந்த நிலை அடிமட்ட நிறுவனங்கள் முதல் அதிநவீன முன்னணி நிறுவனங்கள் வரை அனைத்து தரப்புகளையும் பாதித்துள்ளது. இதனால் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முதலில் புதியவர்களை பணி நியமனம் செய்வது நிறுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக, தற்போதைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
டிவிட்டர் சமீபத்தில் 3,700 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது தான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்த நிலையில் தற்போது Facebook நிறுவனம் யாரும் எதிர்பாக்காத வகையில் அதிரடியாக தனது 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில், Facebook நிறுவன CEO ஜுக்கர்பெர்க் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,
குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி – நவ 13 நுழைவுத் தேர்வு!
Exams Daily Mobile App Download
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான 6 மாத மருத்துவ செலவுகளை நிறுவனம் ஏற்றுக் கொள்வதாகவும், Facebook நிறுவனத்தின் பணி விசாவில் அங்கு தங்கியிருக்கும் அயல்நாட்டவர்களுக்கு விசா தொடர்பான உதவிகளை செய்வதற்கு தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை நியமித்திருப்பதாகவும், நிறுவனத்தில் பணிக்கான புதிய அறிவிப்புகளை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்பாக, பழைய ஊழியர்களுக்கு தெரியப்படுத்த இருப்பார்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஊழியர்களுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை ஊதியத்தையும் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.