இந்தியாவில் இனி ‘இந்த’ சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் – UIDAI அதிரடி!

0
இந்தியாவில் இனி 'இந்த' சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் - UIDAI அதிரடி!
இந்தியாவில் இனி 'இந்த' சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் - UIDAI அதிரடி!
இந்தியாவில் இனி ‘இந்த’ சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் – UIDAI அதிரடி!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக ஆதார் விளங்குகிறது. இந்த நிலையில் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் இனி கட்டாயம் என UIDAI அதிரடியாக தெரிவித்துள்ளது.

UIDAI:

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் தனித்துவமான அடையாளமாக ஆதார் விளங்குகிறது. இன்றைய நடைமுறையில் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆதார் அட்டையில் வழங்கப்படும் 12 இலக்க எண் வங்கி கணக்கு திறப்பு, kyc உள்ளீடுகள் மற்றும் பல அத்தியாவசியமான தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ஆதார் அட்டை வெறும் அடையாளமாக மட்டுமல்லாமல் பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளை பெற கட்டாய ஆவணமாகவும் உள்ளது.

இந்தியாவில் ஆதாரை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு சமீபத்தில் 6 லட்சம் போலி ஆதார் எண்களை அதிரடியாக ரத்து செய்தது. மேலும் மக்கள் யாரையும் நம்பி ஆதாரின் 12 இலக்க எண்ணை தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில், அரசின் அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற ஆதார் எண் அல்லது பதிவு சீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த வாரம் அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழக சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – முழு விபரம் இதோ!
Exams Daily Mobile App Download

அதில், இந்தியாவில் ஆதார் அட்டை இல்லாதவர்கள் அரசின் வேறொரு அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முறை இருந்து வந்தது. தற்போது இந்த முறையில் UIDAI புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, ஆதார் இல்லாதவர்கள் நிரந்தர ஆதார் வரும் வரை, அவர்களுக்கு ஒதுக்கப்படும் ஆதார் பதிவு அடையாள எண் மற்றும் ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம் என்று UIDAI சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆன்லைன் அங்கீகாரம் அல்லது இ-கேஒய்சி க்கு ஆதார் எண்ணுக்கு பதிலாக விஐடியைப் பயன்படுத்தலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி, மற்றும் பிற பணி சார்ந்த காரணங்களுக்காகவும் அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அத்தகைய சான்றிதழ்களுக்கு இனி ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று UIDAI சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!