தமிழகத்தில் புதிய வகை “ஆன்லைன் மோசடி” – எச்சரிக்கை விடுத்த டிஜிபி!

0
தமிழகத்தில் புதிய வகை
தமிழகத்தில் புதிய வகை "ஆன்லைன் மோசடி" - எச்சரிக்கை விடுத்த டிஜிபி!
தமிழகத்தில் புதிய வகை “ஆன்லைன் மோசடி” – எச்சரிக்கை விடுத்த டிஜிபி!

தமிழகத்தில் அவ்வப்போது ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது புதிய வகையில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் மோசடி

தமிழகத்தில் அனைத்துத்துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. இதில் நன்மைகளும் உள்ளது அதே சமயம் இதில் தீமைகளும் உள்ளது. அதாவது ஆன்லைனில் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உக்திகளை மோசடிக்காரர்கள் கையாளுகிறார்கள். இதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். இந்த மோசடிகளில் பொது மக்கள் சிக்கி கொள்ளலாம் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆன்லைனில் புதிய வகை மோசடி நிகழ்வதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் இவர் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் கலெக்டர், டிஜிபி ஆகிய பெரிய அதிகாரி போன்று செல்போனில் பேசி தான் ஆலோசனை கூட்டத்தில் இருப்பதாகவும் தனக்கு அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுவதாகவும் கூறுவார்கள். அத்துடன் ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் அதன்பின்பு தான் பணம் கொடுப்பதாகவும் கூறுவார்கள்.

சென்னை: திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் கூப்பன் வாங்க தெரியாது என்று கூறினாலும் இதற்கான லிங்கை உங்களுக்கு அனுப்புவார்கள். அத்துடன் இது போன்று 50 கூப்பன் வேண்டும் என்றும் கூறுவார்கள். இதனால் நீங்கள் 50 லட்சம் வரை இழக்க நேரிடும். இதனை தொடர்ந்து நீங்கள் இவ்வாறு ஏமாறாமல் இருக்க அதிகாரி போன்று வரும் போன் கால், புகைப்படம் ஆகியவற்றை நம்ப கூடாது என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த புதிய வகை ஆன்லைன் மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் 100,112 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் காவலன் உதவி செயலியிலுள்ள ஆன்லைன் மோசடி என்பதை தொட்டவுடன் 1930 என்ற எண்ணுக்கு தானாக அழைப்பு போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!