ஷாக்கிங் தகவல்.. அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள்.. பிரபல சேனலில் வர போகும் முக்கிய மாற்றம்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
சீரியல்கள் நிறுத்தம்:
பல முன்னணி சேனல்களுடன் போட்டி போட்டு கலர்ஸ் தமிழ் பல புது கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த சேனலில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாய் சில்லுனு ஒரு காதல் சீரியல், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.
Exams Daily Mobile App Download
அதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். இருந்தாலும் தற்போது இந்த சேனலில் பச்சைக்கிளி, வள்ளி திருமணம் உள்ளிட்ட புதிய சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஜமீலா, உள்ளத்தை அள்ளித்தா சீரியல்கள் தவிர மற்ற அனைத்து சீரியல்களும் தொடர்ச்சியாக முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் சேனலை முன்னேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி அனைத்து சீரியல்களும் முடிய இருப்பதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இந்த அனைத்து சீரியல்களிலும் புதுவித கதையுடன் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வந்த நிலையில், இந்த திடீர் மாற்றத்தால் அந்த சேனலில் என்ன புது மாற்றம் வர போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.