அசிமை தொடர்ந்து புது பிரச்சனையை தொடங்கிய விக்ரமன்.. தெளிவாக பேசி முடித்த குயின்சி – “பிக்பாஸ்” ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இன்றைய எபிசோட் குறித்த கடைசி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குயின்சி மற்றும் விக்ரமன் இடையே சண்டை வர, ஆனால் அதற்கு குயின்சி மிகவும் பொறுமையாக விளக்கம் அளிக்கிறார்.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது நான்கு வாரங்கள் ஆகி இருக்கிறது. தற்போது நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வார தலைவராக மணிகண்டன் இருக்கிறார். சென்ற வாரம் முழுவதும் போட்டியாளர்களிடம் சண்டை வந்த நிலையில், இந்த வாரம் ஆடல், பாடல், நடிப்பு என பொழுது போக்கு சம்மந்தமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சண்டை எதுவும் இல்லை என்றாலும், வேண்டும் என்றே அசிம்மை கோவப்படுத்த தனலட்சுமி நடந்து கொள்வது எல்லாம் வெளியே அப்படியே தெரிகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் சென்ற வாரம் நல்லவராக தெரிந்த விக்ரமனின் உண்மையான சுயரூபம் வெளியே வந்துள்ளது. அதாவது அவர் சரியாக வேலை செய்யாமல் அடுத்தவர்களை குறை சொல்லி வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் விக்ரமன் மீது குயின்சி கோவமாக இருக்கிறார். உடனே விக்ரமன் குயின்சி நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டதாக சொல்கிறார். அவர் குயின்சி உடன் பேச நினைக்க ஆனால் குயின்சி எனக்கு பேச இஷ்டம் இல்லை என சொல்லி எழுந்து செல்கிறார். அப்போது விக்ரமன் பின்னால் வந்து அவரிடம் பேசுகிறார்.
தமிழில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் சீரியல்.. அடுத்த பாரதி கண்ணம்மா போலயே – களமிறங்கும் பிரபல நடிகர்!
Follow our Instagram for more Latest Updates
குயின்சி தெளிவாக நிகழ்ச்சியின் போது நியூஸ் வாசிக்க நீங்க ஜனனியை அழைத்தது எனக்கு பிரச்சனையே இல்லை. ஏன் என்றால் அவள் செய்தி வாசிப்பாளர். ஆனால் அமுதவாணன் சொல்லும் போது நியூஸ் வாசிக்க குயின்சி வேண்டாம் என நீங்க சொன்னதை நான் கேட்டேன். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நீங்க என்னிடம் பேச வேண்டாம் என சொல்ல, விக்ரமன் மாட்டிக் கொண்டோம் என்பது போல பார்க்கிறார். இனிமேல் தான் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.