TCS, Infosys நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – ஒரு பார்வை!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலையை நிறுத்தி வீட்டிலிருக்கும் திறமை வாய்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. அந்த வகையில் மீண்டும் பெண் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்து பணிகளையும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் செயல்படுத்தியது. இதனால் வேலையை நிறுத்தி வீட்டிலிருக்கும் திறமை உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் பல்வேறு முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அதிக ஊதியம் பெறும் ஐடி ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு பெண் ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய முடிவு இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் வெளியேற்ற விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், நீண்ட காலம் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்புகள் தற்போது சந்தையில் உருவாகியிருக்கும் காரணத்தாலும் அதிகளவிலான பெண் ஐடி ஊழியர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. ஏனெனில் ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் ஒரே இடத்தில் பணிபுரிவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா இல்லாமல் கயலுடன் பொங்கல் கொண்டாடிய தனம் – ரசிகர்கள் உற்சாகம்!
அதனை தொடர்ந்து தற்போது நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இது TCS நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 36% ஆகும். அதிலும் குறிப்பாக உயர் பதவிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 2016 முதல் 21ம் ஆண்டுகளில் சுமார் 68% அதிகரித்துள்ளதாக TCS தெரிவித்துள்ளது. இவ்வாறாக TCS நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.