தமிழகத்தில் ஜூலை 30ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜூலை 30) நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதி, வயது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் வடலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
Exams Daily Mobile App Download
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடலூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பண்ரூட்டி வட்டம், மங்குகூர் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜூலை 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் 200க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் – ஆகஸ்ட் 1 முதல் அமல்
இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். மேலும் இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த 8, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, கலை அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தமிழ்நாடு தனியார் துறை இணையதள முகவரியில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். அல்லது 04142-290039, 9499055908 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.