கண்ணம்மாவின் கண் முன் பார்வதியை எரித்த சாமியார் கும்பல் – பரபரப்பான “பாரதி கண்ணம்மா” & “ராஜா ராணி 2” மகா சங்கமம்!
கடந்த வாரம் முதல் “பாரதி கண்ணம்மா” , “ராஜா ராணி 2” ஆகிய இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது வரும் வாரத்திற்கான காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மகா சங்கமம்:
ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இணைந்து ஒளிபரப்பாகி வரும் மகா சங்ககம் காட்சிகள் கடந்த வாரம் முதல் மிகவும் அதிரடியான திருப்பங்களுடன் வருகிறது. ஏற்கனவே சாமியார் கோயில் கட்டுவதற்கு சந்தியா தடையாக இருப்பதால், அவரது குடும்பத்தின் மீது அந்த சாமியார் மிகவும் கோவமாக இருக்கிறார். மேலும், அவர்களை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தகுந்தாற் போல் ஊர் மக்களும் சாமியார் சொல்வதை நம்புகின்றனர். இந்நிலையில், பாரதியும், கண்ணம்மாவும் திருவிழாவில் சாமியாரை பார்த்தவுடன் இவர் சரியில்லை என்று கணித்து விடுகின்றனர்.
சந்தியா குடும்பத்தை பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருந்த சாமியார் திருவிழாவில் சாமியை அலங்கரிக்க ஊர் பெண்களை கூப்பிடுகிறார். அப்போது சிவகாமி, சந்தியா மற்றும் கண்ணம்மா 3 பெரும் செல்கின்றனர். அப்போது சாமியின் நகை திருடு போய் விட்டதாக சந்தியா குடும்பத்தின் மீது சாமியார் பழி போடுகிறார். இதனால் அவர்கள் குடும்பத்தையும் பாரதி மற்றும் கண்ணம்மாவையும் 48 மணி நேரத்திற்கு ஊரை விட்டு தள்ளி வைக்கிறார்.
மேலும், நகை திருடு போனதற்கு பரிகாரமாக ஊர் பெண்கள் இரவில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதனால் கண்ணம்மா, சந்தியா மற்றும் பார்வதி 3 பேரும் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர். அப்போது சந்தியாவை கட்டையால் அடித்து விட்டு, பார்வதி மற்றும் கண்ணம்மாவை சாமியாரின் கும்பல் ஒன்று கடத்தி செல்கின்றனர். பின்னர், கண்ணம்மாவின் கண் முன்னரே பார்வதியை செல்வத்தை வைத்து எரித்து, பார்வதியின் உடமைகளை சந்தியாவின் வீட்டிற்கு பார்சலில் அனுப்புகின்றனர். மேலும், எரிந்து போன உடல் ஒன்று ஊரில் ஆள் இல்லாத இடத்தில் உள்ளதாக போலீசார் கூறியதும், குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று அதிர்ச்சியிடன் பார்க்கும் படி ப்ரோமோ வெளியாகியுள்ளது.