லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முக்கிய வாக்குறுதி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதி
சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை கட்சிகள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதியை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முக்கிய வாக்குறுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இயற்கை சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க இயலாத நாட்களில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 500 வழங்கப்படும் எனவும், கன்னியாகுமரியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.