தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்குக்கு தடை – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்குக்கு தடை - அரசிடம் வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு ஏகப்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து உயிரையும் மாய்த்துக் கொள்ளும் சோகம் தொடர் கதையாகி இருக்கிறது. தற்போது கூட கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் இளைஞர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து, அதிக கடன் பிரச்சனையால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டார்.

இந்த செய்தியை கேள்வி பட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுக்கவில்லை. அதனால் அரசு இது குறித்து அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!