ராதிகா தலைமையில் பழனி பாக்கியா திருமணம்.. கடுப்பில் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி ” பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா பழனிசாமியிடம் பாக்கியாவை திருமணம் செய்ய சொல்கிறார். ராதிகாவின் இந்த செயலால் கோபிக்கு அவர் மீது பயங்கர கோவம் வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிற்கு பல தடைகள் வருகிறது. ஆனால் அதை எல்லாம் அவர் தகர்த்து கஷ்டப்பட்டு கேண்டீன் ஆர்டரை பெறுகிறார். கேண்டீன் திறப்பு விழாவிற்கு ராதிகாவை பாக்கியா அழைக்கிறார். அதை பார்த்த பழனிச்சாமி உங்களுக்கு ராதிகா மீது கோவம் இல்லையா என கேட்க, நான் இந்த அளவிற்கு வருவதற்கு ராதிகா தான் காரணம் என பாக்கியா சொல்கிறார்.
TN TET தேர்வில் 100% வெற்றி நிச்சயம் – அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
மறுபக்கம் பழனிச்சாமி ராதிகாவிடம் சென்று உங்களுக்கு பாக்கியா மீது கோவம் இல்லையா என கேட்க, அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் என சொல்கிறார். உடனே ராதிகா நீங்க இருவரும் கல்யாணம் செய்து கொண்டால் என்ன என கேட்கிறார். உடனே பழனிக்கு பாக்கியா மீது ஆசை வருகிறது. பாக்கியாவை குடும்பத்தினர் சம்மதிக்க வைத்து கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் இது கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது. அதனால் கோபி கல்யாணத்தை நிறுத்த சில வேலைகளை செய்கிறார். அதை பார்த்த ராதிகாவுக்கு கோவம் வர இருவரும் பிரியும் நிலை வருக்கிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.