தமிழக மருத்துவத்துறையில் 5000 காலிப்பணியிடம் நிரப்பல் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
தமிழக மருத்துவ துறையில் காலியாகவுள்ள 5000 பணியிடங்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
மருத்துவத்துறை:
தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்துள்ளார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
TNPSC தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு – தேர்வுத்துறை அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
மேலும், தமிழக மருத்துவ துறையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் என 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பப்படும் எனவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் பணியிடம் நிரப்பப்பட்டு தேர்வாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.