தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை – முதல்வருக்கு குவியும் பாராட்டு!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
உரிமைத்தொகை:
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மு.க ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்களும் பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்.. கொரோனா எதிரொலி – லக்னோ அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது குடும்ப குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டம் செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக பட்ஜெட்டில் 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிபந்தனைகள் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் அலுவலகத்தில் மன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கு அறிமுகப்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Exams Daily Mobile App Download