பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்.. கொரோனா எதிரொலி – லக்னோ அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்.. கொரோனா எதிரொலி - லக்னோ அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்.. கொரோனா எதிரொலி - லக்னோ அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்.. கொரோனா எதிரொலி – லக்னோ அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் லக்னோவில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் லக்னோ மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் மற்றும் பிற பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!

மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும்,பள்ளி/கல்லூரிகளில் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் வகுப்பறைக்குள் போதுமான இடைவெளியில் அமர வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் வகுப்பறைக்குள் வர தடை விதிக்க வேண்டும் எனவும், சளி, காய்ச்சல் அல்லது காய்ச்சலின் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் பிற பொது இடங்கள் நுழைவாயில்கள், கதவுகள், தண்டவாளங்கள், லிப்ட்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றில் தெர்மல் ஸ்கிரீனிங் பொருத்த வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகள்/மால்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கும் வழிகாட்டுதல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் படி இந்த அனைத்து இடங்களின் நுழைவாயில்களிலும் தெர்மல் ஸ்கேனிங் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அந்த இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என லக்னோ அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!