1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ‘இத்தனை’ நாட்கள் விடுமுறையா? – புதிய வைரஸ் பரவல் எதிரொலி!
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதிய வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவி வருவதால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவல் காரணமாக அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
அதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுவை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிப்படைவதால் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுத்தேர்வை தவற விட்ட 12, 660 மாணவர்கள் – வெளியான ஷாக் தகவல்!
மேலும் குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காய்ச்சல் அதிகம் பரவுவதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ( 16) முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.