தமிழகத்தில் பொதுத்தேர்வை தவற விட்ட 12, 660 மாணவர்கள் – வெளியான ஷாக் தகவல்!
தமிழகத்தில் நேற்று (மார்ச் 14) மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் சுமார் 12, 660 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வந்துள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த 13ம் தேதி மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) மாணவர்களுக்கு 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது முதல் மொழிபாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 50,674 மாணவ மாணவிகள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவடையும் வரை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நேற்று நடைபெற்ற இந்த மொழிப்பாடத்தேர்வுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள், தனித்தேர்வர்கள் என சுமார் 7,73,688 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வில் 12,660 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.