மின்வாரிய ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு – பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி!

0
மின்வாரிய ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு - பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி!
மின்வாரிய ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு - பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி!
மின்வாரிய ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு – பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி!

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதால் மின்வாரிய ஊழியர்கள் வெளியூர் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது

முக்கிய உத்தரவு

பிப் 1 ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தமிழக அரசு 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் பட்ஜெட்டில் மக்களுக்கான பல நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மின்வாரிய ஊழியர்கள் வெளியூர் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத் தொடர் மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்கி முடியும் நாள் வரை காலை 9.30 மணிக்கு அலுவலகம் வர மின்வாரிய ஊழியர்களுக்கு ஆணையிட்டுள்ளது. மேலும், மின்வாரியம் சார்ந்த எந்த தகவலையும் அரசு கேட்டால் அதனை செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!