இனியாவை படிக்க சொல்லி மிரட்டும் ராதிகா, நிலாவை கொஞ்சும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார். மறுபக்கம் இனியாவை ராதிகா சரியாக படிக்கவில்லை என குறை சொல்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எல்லா வேலைகளையும் சரியாக செய்து முடிக்கிறார். பின் எழில் அவர்களை பார்க்க வர உடனே செல்வி அமிர்தாவை பார்க்க வருவதாக சொல்கிறார். பின் எழில் சரி அமிர்தாவை தான் பார்க்க வந்தேன் என சொல்கிறார். மறுபக்கம் ஜெனி நிலா உடன் விளையாடி கொண்டிருக்கிறார். அப்போது செழியன் மற்ற குழந்தைகளை கொஞ்சி கொண்டு என் குழந்தையை கொஞ்சாமல் இருக்காதே என சொல்கிறார். பின் ஜெனி குழந்தையை விட்டுவிட்டு செல்ல, செழியனை பெரியப்பா என நிலா கூப்பிடுகிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அப்போது செழியனுக்கு நிலா மீது ஆசை வருகிறது. பின் ஜெனி செழியனை கிண்டல் செய்கிறார். பின் இனியா படிக்காமல் போனை நொண்டிக் கொண்டே இருக்கிறார். அப்போது ராதிகா சரியாக படிக்கவில்லை என போனை வாங்க, இதெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என இனியா கேட்க, ராதிகா நான் யாராக இருந்தாலும் அப்படி தான் கேட்பேன் என சொல்கிறார். நீ 11th படிக்கிறாய் உனக்கு இப்போது படிப்பு தான் முக்கியம் என சொல்ல, இனியா நீங்க என் அம்மா இல்லை என சொல்கிறார். நானும் உனக்கு அம்மா போல தான் என ராதிகா சொல்கிறார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்ற சானியா மிர்சா!!
பின் இனியா கோபியிடம் புகார் அளிக்க நான் கேட்கிறேன் என கோபி சொல்கிறார். ஆனால் ராமமூர்த்தி நீ அந்த வீட்டில் இருந்தாலும் இதான் நடக்கும் ராதிகா சரியாக தான் பேசுவதாக சொல்கிறார். தாத்தாவும் மாறிவிட்டதாக இனியா நினைக்கிறார். பின் இனியா காலையில் படிக்க அலாரம் வைக்க ஆனால் எழுந்திருக்கவில்லை. உடனே ராதிகா இனியாவை எழுந்து படிக்க சொல்ல, ஆனால் இனியா எழுந்திருக்காமல் இருக்கிறார். பின் ராதிகா எழுப்ப ராமமூர்த்தி எழுந்துவிடுகிறார். ராதிகா இனியாவை மல்லுக்கட்டி எழுப்பிவிடுகிறார். இனியா தாத்தாவிடம் புகார் சொல்ல, நீ படிக்க வேண்டும் என தான் அவ சொல்வதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.