சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்ற சானியா மிர்சா!!
தற்போது துபாயில் நடந்து வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சானியா மிர்சா
கடந்த 20 ஆண்டு காலமாக இந்திய விளையாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றி வந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று (பிப்ரவரி 21) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டில் டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக களமிறங்கிய சானியா மிர்சா கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2023 டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி இருந்தார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஓலா, உபெர் & ரேபிடோ பைக் டாக்ஸி சேவை நிறுத்தம் – அதிரடி காட்டிய டெல்லி அரசு!!
இதை தொடர்ந்து இன்று துபாயில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடிய சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில், சானியா மிர்சா இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை எதிர்கொண்டார். சானியா மிர்சா இதுவரை விளையாடிய போட்டிகளில் 8 ஆசிய பதக்கங்கள், 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் 43 WTA பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.