தமிழகம் முழுவதும் 15,599 சிறப்பு பேருந்துகள்.. மக்கள் மீண்டும் இருப்பிடம் திரும்ப அரசு ஏற்பாடு!

0
தமிழகம் முழுவதும் 15,599 சிறப்பு பேருந்துகள்.. மக்கள் மீண்டும் இருப்பிடம் திரும்ப அரசு ஏற்பாடு!
தமிழகம் முழுவதும் 15,599 சிறப்பு பேருந்துகள்.. மக்கள் மீண்டும் இருப்பிடம் திரும்ப அரசு ஏற்பாடு!
தமிழகம் முழுவதும் 15,599 சிறப்பு பேருந்துகள்.. மக்கள் மீண்டும் இருப்பிடம் திரும்ப அரசு ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் இருந்து சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடம் திரும்ப ஏதுவாக 15000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை அரசு இயக்க உள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வேறு இடங்களில் குடியேறி உள்ளனர். இவர்கள் அனைவரும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விஷேச நாட்களில் மட்டுமே மீண்டும் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதற்காக அரசு கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி 14 போகி முதல் ஜனவரி 17 காணும் பொங்கல் தினம் வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழக மக்களின் கவனத்திற்கு.. ஜனவரி 19 மின்தடை அறிவிப்பு – விவரங்கள் இதோ!

Follow our Instagram for more Latest Updates

இதனால், ஜனவரி 13 வெள்ளிக்கிழமை மாலை முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கினர். வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவிலானவர்கள் வந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 10 லட்சம் பேர் ஊர்களுக்கு சென்றுள்ளனர். மக்கள் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் இருப்பிடத்திற்கு திரும்ப ஏதுவாக அரசு ஜனவரி 16ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை 15,599 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இவற்றில், வழக்கமாக சென்னைக்கு செல்லும் 2,100 பேருந்துகளுடன் 4334 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!