TNPSC CSSSE புள்ளியியல் சார்நிலை பணிக்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு விவரங்கள் – வெளியீடு!
TNPSC தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகள் கீழ் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் உள்ள பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
கலந்தாய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு 20.10.2021ம் நாள் அன்று வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.01.2022 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் 22.03.2022 அன்று வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர், தடுப்பூசி பண்டகக்காப்பாளர் உள்ளிட்ட பதவியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் இப்பதவிகளுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 28ம் தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த தேதிகளில் Bank-க்கு போக முடியாது – ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் மூலசான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு SMS, Email மற்றும் தபால் மூலமும் அதற்குரிய விவரங்கள் அனுப்பப்படும்.
கலந்தாய்வு நடைபெறும் இடம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், தேர்வாணையச் சாலை, (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை – 03.