44,611 இந்தியர்களின் Twitter கணக்குகளுக்கு தடை – நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து ட்விட்டர் செயலில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் இந்தியர்களின் 44,611 ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர்:
உலகின் பிரபல நிறுவனமான ட்விட்டரை மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இவர் ட்விட்டர் நிறுவனத்திற்கு பொறுப்பேற்ற பிறகு நிறுவன வளர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் புதிய மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளூ டிக் முறையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 25 வரையிலான காலகட்டத்தில் பல ஆயிரம் இந்தியர்களின் ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவிடல், பயங்கரவாதம் உள்ளிட்ட கொள்கை மீறல் காரணங்களுக்காக 44,611 இந்தியர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம்பர் 1 செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள Flipkart-இன் ஷாப்ஸி – 100 மில்லியன் பயனர்கள்!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே இதே போன்று 57 ஆயிரம் இந்தியர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் ஆபாச படங்கள் வெளியிடுவது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.