வீட்டில் இருந்தே வேலை.. ஆயிரக்கணக்கில் சம்பளம் – பெண்களை குறிவைக்கும் புதிய மோசடி!
வேலையில்லா திண்டாட்டம் சில காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக அரசு வேலைவாய்ப்புகளை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
புதிய மோசடி:
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பாக மக்களின் பொருளாதார நிலை இருந்ததை விட தற்போது சரிவை சந்தித்துள்ளது. நாட்டில் வேலையில்லா நிலை அதிகரித்து வருகிறது. ஆனால் விலைவாசி உயர்வை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை சமாளிக்க மக்கள் கிடைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதிலும், பெண்கள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் குடும்ப சூழ் நிலை காரணமாக வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத நிலை இருக்கும். இவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர். இவர்களை குறிவைத்து தான் தற்போது மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றது.
இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மனு… மத்திய அரசு பதில்!
Exams Daily Mobile App Download
அதாவது, குறைந்த கல்வி தகுதி, ஒரு மணி நேரம் வீட்டில் இருந்தே வேலை, ஆயிரக்கணக்கில் சம்பளம் என்று பல ஆசை வார்த்தைகளை கூறி பெண்களின் தகவல்கள் திருடப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் கோவையில் அதிகரித்து வருவதாகவும், இது போன்ற மோசடியான விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல் துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.